‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் இருந்து திடீரென விலகிய முல்லை (காவியா)…. அடுத்து நடிக்கவிருக்கும் புது முல்லை இவர்தானா…. ஆர்வத்தில் ரசிகர்கள் …..

By Begam

Published on:

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லையாக நடித்துக் கொண்டிருந்த காவ்யா தற்பொழுது இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியல்களிள் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இது கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கூட்டு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளையும், அன்பு, பாசம், கோபம் போன்றவற்றையும்  எடுத்துரைக்கிறது. இந்த சீரியல் மூன்று வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடைபோடும்  இந்த தொடர் தற்போது தான் தனது ஆயிரம் எபிசோடை கொண்டாடியது.

   

இந்த தொடரில் ஏற்பட்ட நடிகர்களின் மாற்றத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கதாபாத்திரம் முல்லை. இந்த தொடரில் முல்லையாக நடித்து கொண்டிருந்தவர் சித்ரா. இவர் எதிர்பாராதவிதமாக தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இந்த கதாபாத்திரத்தை ஏற்று யார் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்க காவியா என்பவர் நடிக்க ஆரம்பித்தார்.

முதலில் இவரை அங்கீகரிக்காத மக்கள் தற்பொழுது தான் ஏற்றுக் கொள்ள முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அவரும் இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலை  விட்டு விலகி உள்ளார். தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்த முல்லையாக ‘அபிநயா’ நடிக்க இருப்பதாக கூறுகின்றனர். இவர் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஏற்கனவே சித்ராவின் தோழியாக ஒரு காட்சியில் வந்து செல்வார். பொறுத்திருந்து பார்ப்போம் பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த முல்லை யார் என்று.