‘வாய்தா’ பட நடிகையின் நிறைவேறாத ஆசை இதுதானா?…..அவர் உயிரைப் பறித்தது எது? காதலா… சினிமாவா… வெளியான உண்மை தகவல்….

By Begam

Published on:

‘வாய்தா’ பட நடிகையான ஜெசிகா பௌலின் என்ற நடிகை தீபா தனது அபார்ட்மெண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ், வீடியோக்கள் என வெளியிட்டு அதன் மூலம் சிலர் பிரபலம் அடைகின்றனர். அதுபோல தான் வாய்தா பட வாய்ப்பு கிடைத்தது நடிகை ஜெசிகா பௌலினுக்கு. நடிகை ஜெசிக்கா யு டுயுப்பில் சிறு குறும் படங்களில் நடித்து தனது வெள்ளித்திரை பயணத்தை ஆரம்பித்தார். சிறுவயதிலிருந்தே நடிகை ஆக வேண்டும் என்பது அவரது கனவு.

   

இந்த கனவை நிறைவேற்றுவதற்காக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் சென்னை வந்து சேர்ந்தார். சென்னையில் எங்கெல்லாம் நடிகைகளுக்கான ஆடிஷன்  நடைபெறுகிறதோ அங்கெல்லாம் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்தார். அப்படிகிடைத்தது தான்’ வாய்தா’ பட வாய்ப்பு.

திறமையான நடிகையான இவர் தைரியசாலியும் கூட. வாய்தா படத்திற்கு பின்னர் பிரபலம் அடைந்த இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். தற்பொழுது அவர் தனது அப்பார்ட்மெண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு காரணம் அவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடிக்க இருந்த படங்கள் கை நழுவி போனதாம்.

பட வாய்ப்புகள் கையை விட்டு நழுவிய காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த சமயத்தில் தனது காதலனும் தன்னை ஏமாற்றியதால் மனவிரக்தி  அடைந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இவரின் நிறைவேறாத நீண்ட நாள் ஆசை ‘ஒரு சிறிய கார் வாங்க வேண்டும்’ என்பதாம். இந்த சிறிய ஆசை கூட நிறைவேறுவதற்கு முன்பே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருடைய இறப்பு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

author avatar