சூப்பர் சிங்கர் நடுவர் பாடகி கல்பனாவின் அப்பாவை பார்த்து இருக்கீங்களா?… யாரும் பார்த்திராத UNSEEN புகைப்படம் உள்ளே…

By Begam

Published on:

சூப்பர் சிங்கரில் நடுவராக இருக்கும் பாடகி கல்பனா தனது அப்பாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல இசை குடும்பத்தில் இருந்து வந்து, தன்னுடைய தனித்துவமான குரலால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து திரையுலக ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமானவர் பாடகி கல்பனா. இவருடைய தந்தை டி.எஸ் ராகவேந்திரா மிகச் சிறந்த பாடகர் மட்டுமின்றி சிறந்த இசையமைப்பாளர் மற்றும் நடிக.ர் இவருடைய தாய் சுலோச்சனா சிறந்த பாடகி.

   

கல்பனா சிறுவயதிலிருந்தே கர்நாடக சங்கீதம் பழகியவர். மேலும் இவருடைய சகோதரியும் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையே ஒரு இசையமைப்பாளர் என்பதால் கல்பனாவுக்கு சங்கீத ஞானம் பிறவி பரிசாக அமைந்தது. முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக மதுரை டி எஸ் கிருஷ்ணன் அவர்களிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டார்.

இவர் பாடிய பாடல்களில் குறிப்பிடத்தக்கவை, நரசிம்மா திரைப்படத்தில்’ லாலா நந்தலாலா’ பாடல், மைனா திரைப்படத்தில் ‘ஜிங்கி  ஜிங்கி  ஜிமிக்கி போட்டு’ பாடல், பிரியமான தோழி திரைப்படத்தில்’ பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்’ என்று இவர் பாடிய பாடல்கள் ஏராளம்.

தற்போது இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் பாடகி கல்பனா தனது அப்பாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….