Categories: சினிமா

பீ சுசீலா தன்னால் பாடவே முடியாது என்று சொன்ன பாடல்… டார்ச்சர் செய்து பாடவைத்த எம் எஸ் வி!

Spread the love

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம் எஸ் விஸ்வநாதன். இருவரின் படங்களுக்கும் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த அவர் 80 களின் இறுதிவரை இசையமைத்தார். தன்னுடைய கேரியரில் ஒட்டுமொத்தமாக 1000 படங்களை நெருங்கி இசையமைத்துள்ளார்.

எம் ஜி ஆர் படங்களுக்கு மக்களைக் கவரும் வெகுஜன பாடல்களை இசையமைக்கும் எம் எஸ் வி சிவாஜி படங்கள் என்றால் தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், சோகப் பாடல்கள் என்று குஷியாகிவிடுவார். அதனால் அவர் சிவாஜிக்கு இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் ஹிட்டாக அமைந்தன.

அப்படி 1968-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் உயர்ந்த மனிதன். இந்த படத்தில் சிவாஜி கணேசன், சவுக்கார் ஜானகி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர். மேஜர் சுந்தர்ராஜன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.  இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக  ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ‘ என்ற பாடல் இன்றளவும் கேட்கப்படும் பாடலாக உள்ளது.

இந்த படத்தில் வரும் மற்றொரு ஹிட் பாடல்தான் பீ சுசீலா பாடிய ‘’நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’’ என்ற பாடல் து. வாலி எழுதிய இந்த பாடலுக்கு தனது குரலின் மூலம் உயிர்கொடுத்தவர் தான் பி.சுசிலா. ஆனால் இந்த பாடலை அவர் மிக எளிதாக பாடிவிட வில்லையாம். இந்த பாடல் பதிவின்போது, என்னால் இந்த பாடலை பாட முடியாது என்று சுசிலா அழுதுகொண்டே கூறியுள்ளார்.

ஆனால் இசையமைப்பாளர் எம் எஸ் வி அவரை அப்படி விட்டுவிடவில்லை. நீதான் இந்த பாடலை பாடவேண்டுமென சொல்லி பிடிவாதமாக இருந்துள்ளார். அதனால் பல ரீ டேக்குகள் வாங்கிதான் இந்த பாடலை சுசீலா பாடி முடித்துள்ளார். அப்படி உருவான பாடல்தான் இன்றுவரை எவர்க்ரீன் ஹிட்டாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

 

vinoth

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

1 மணத்தியாலம் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

1 மணத்தியாலம் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

1 மணத்தியாலம் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

1 மணத்தியாலம் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

1 மணத்தியாலம் ago