#image_title
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா விஷால் காமினேஷனை சிறப்பாக படமாக்கி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். டைம் ட்ராவல் மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி கூட்டணியில் விஷால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் வருகிற 26 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் லீட் ரோலில் நடித்துள்ளனர். நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஹரி இணையும் மூன்றாவது திரைப்படம்.
இது இதற்கு முன்னதாக தாமிரபரணி, பூஜை உள்ள திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், இயக்குனர் ஹரி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார்கள்.
அப்போது பயில்வான் ரங்கநாதனும் அங்கு வந்திருந்தார். அவர் விஷாலிடம் ஒரு கேள்வி கேட்டார். அவரைப் பார்த்தவுடன் அவரின் கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது என்று வெளிப்படையாக பேசிவிட்டார் விஷால். மேலும் அது “அவருக்கே தெரியும், நான் ஏன் பதில் சொல்ல மாட்டேன் என்று.. அவருடைய கேள்விக்கு நான் கட்டாயம் பதில் கூறவே மாட்டேன்” என்று மறுத்துவிட்டார் நடிகர் விஷால். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…