Categories: சினிமா

இவர் சினிமாவுக்கு லாயக்கு இல்லை.. வேறு ஏதாவது வேலைக்கு போக சொல்லு.. வாலியை மட்டம் தட்டி பேசிய MS விஸ்வநாதன்..

Spread the love

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார்.

ஆனால் எந்தகாலத்திலும் அவர் நம்பர் 1 கவிஞராக இருந்தார். எப்போதும் இரண்டாவது இடத்திலேயே இருந்தார். ஆனால் 60 ஆண்டுகளில் அவருக்கு பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை உருவானதே இல்லை. அந்த அளவுக்கு இறக்கும் வரையிலும் பிஸியாக இருந்தார்.

வாலியின் தனிச்சிறப்பே அவர் யாரிடமும் சண்டை போட்டு பிரிந்து செல்ல மாட்டார் என்பதுதான். எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி அனிருத் வரை அவர் பாடல்கள் எழுத காரணமாக அவரின் இந்த பழகும் தன்மைதான். சினிமாவில் நுழைந்து ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் எழுதிக் குவித்திருந்தாலும் ஆரம்பத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் எளிதில் கிடைக்கவில்லை.

திருச்சியில் இருந்து சென்னை வந்து பாடல் வாய்ப்புகளுக்காக அவர் அலைந்து கொண்டிருந்த போதும் அவரின் நண்பரும் நடிகருமான வி கோபாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனிடம் வாலியை அழைத்து சென்றுள்ளார். அவர் எழுதி வைத்திருந்த சில பாடல்  வரிகளைப் படித்த எம் எஸ் வி, வாலியின் நண்பரிடம் “இவர் சினிமாவில் பெரிய ஆளாக வரமுடியாது. நல்லா படிச்சுருக்காரு, பேசாம வேறு எதாவது வேலைக்கு போக சொல்லு’ என முகத்திலடிப்பது போல சொல்லி அனுப்பிவிட்டாராம்.

இதைக் கேட்ட வாலிக்கு நம்பிக்கையே போய்விட்டதாம். ஏனென்றால் அப்போது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து கொண்டிருந்தார் எம் எஸ் விஸ்வநாதன். அவரே நம் வரிகளை இப்படி ஒதுக்கிவிட்டாரே என்று. ஆனாலும் மனம் தளராமல் வாய்ப்புகளை தேடி இறுதியாக கற்பகம் என்ற படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார்.

அந்த பாடல் ஹிட்டாகவே அதன் பின்னர் தன்னை நிராகரித்த எம் எஸ் வி இசையில்தான் அவர் அதிக பாடல்களை எழுதினார் என்பது அனைவரும் அறிந்ததே. காதலர்கள் போல மோதலலில்தான் பிறந்துள்ளது எம் எஸ் வி, வாலி கூட்டணியும்.

vinoth

Recent Posts

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

8 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

14 minutes ago

FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…

20 minutes ago

கண்கலங்க வைக்கும் துயரம்: “டீ குடிக்கச் சென்ற இடத்தில் எமன்..” – சாத்தூரில் 3 பிளஸ்-2 மாணவர்கள் பலியான நெஞ்சை உருக்கும் பின்னணி…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…

27 minutes ago

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

2 மணத்தியாலங்கள் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

2 மணத்தியாலங்கள் ago