Categories: CINEMA

இவர் சினிமாவுக்கு லாயக்கு இல்லை.. வேறு ஏதாவது வேலைக்கு போக சொல்லு.. வாலியை மட்டம் தட்டி பேசிய MS விஸ்வநாதன்..

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார்.

ஆனால் எந்தகாலத்திலும் அவர் நம்பர் 1 கவிஞராக இருந்தார். எப்போதும் இரண்டாவது இடத்திலேயே இருந்தார். ஆனால் 60 ஆண்டுகளில் அவருக்கு பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை உருவானதே இல்லை. அந்த அளவுக்கு இறக்கும் வரையிலும் பிஸியாக இருந்தார்.

வாலியின் தனிச்சிறப்பே அவர் யாரிடமும் சண்டை போட்டு பிரிந்து செல்ல மாட்டார் என்பதுதான். எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி அனிருத் வரை அவர் பாடல்கள் எழுத காரணமாக அவரின் இந்த பழகும் தன்மைதான். சினிமாவில் நுழைந்து ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் எழுதிக் குவித்திருந்தாலும் ஆரம்பத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் எளிதில் கிடைக்கவில்லை.

திருச்சியில் இருந்து சென்னை வந்து பாடல் வாய்ப்புகளுக்காக அவர் அலைந்து கொண்டிருந்த போதும் அவரின் நண்பரும் நடிகருமான வி கோபாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனிடம் வாலியை அழைத்து சென்றுள்ளார். அவர் எழுதி வைத்திருந்த சில பாடல்  வரிகளைப் படித்த எம் எஸ் வி, வாலியின் நண்பரிடம் “இவர் சினிமாவில் பெரிய ஆளாக வரமுடியாது. நல்லா படிச்சுருக்காரு, பேசாம வேறு எதாவது வேலைக்கு போக சொல்லு’ என முகத்திலடிப்பது போல சொல்லி அனுப்பிவிட்டாராம்.

இதைக் கேட்ட வாலிக்கு நம்பிக்கையே போய்விட்டதாம். ஏனென்றால் அப்போது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து கொண்டிருந்தார் எம் எஸ் விஸ்வநாதன். அவரே நம் வரிகளை இப்படி ஒதுக்கிவிட்டாரே என்று. ஆனாலும் மனம் தளராமல் வாய்ப்புகளை தேடி இறுதியாக கற்பகம் என்ற படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார்.

அந்த பாடல் ஹிட்டாகவே அதன் பின்னர் தன்னை நிராகரித்த எம் எஸ் வி இசையில்தான் அவர் அதிக பாடல்களை எழுதினார் என்பது அனைவரும் அறிந்ததே. காதலர்கள் போல மோதலலில்தான் பிறந்துள்ளது எம் எஸ் வி, வாலி கூட்டணியும்.

vinoth

Recent Posts

வைரலான ஆடியோ நோட்.. சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் எடுத்த அதிரடி முடிவு.. அவரே வெளியிட்ட வீடியோ..!!

சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…

34 mins ago

“இவன உலகத்துக்கே பிடிக்கும்… ஆனா எனக்குப் பிடிக்காது” – மோகன்லாலை பற்றி கசப்பான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை மெட்டி ஒலி சாந்தி!

சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும்…

1 hour ago

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷும், சிம்புவும் அதை செய்றாங்க… இதெல்லாம் ரொம்ப அநியாயம்… சினிமா பிரபலம் புலம்பல்!

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது…

1 hour ago

கையில் கட்டுடன் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்.. வியந்துபோன வெளிநாட்டினர்.. புகைப்படங்கள் வைரல்..

நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட…

2 hours ago

உலகின் தலைசிறந்த சொல் செயல்.. இந்தியாவுக்காக ஆட முடியாமல் தவித்த மாணவி.. லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…

3 hours ago

சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

6 hours ago