நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் பேரணியை தொடங்கியுள்ளனர். வாக்கு திருட்டு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி சென்று அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியுள்ளனர். 2024 லோக்சபா தேர்தலில் வாக்குத்திருட்டியில் ஈடுபட்டே பாஜக ஆட்சிக்கு வந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி இந்த பேரணியை முன்னெடுத்துள்ளார். தற்போது பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மும்பையில் பரபரப்பான சூழல் நிலவு வருகிறது.
