“ஹலோ அங்கிள்.. எங்க அம்மா அங்க இருக்காங்களா?”…. மருமகளுக்கு வந்த போனை எடுத்த மாமனார்… அடுத்த நொடியே மாப்பிள்ளை குடும்பத்துக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!

Spread the love

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ரவிச்சந்திராவிற்கும், துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த ரேகா என்ற பெண்ணிற்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக பெண் தேடி வந்த ரவிச்சந்திராவின் குடும்பத்தினர், ரேகாவைப் பெண் பார்த்து நிச்சயம் செய்தனர். இந்த திருமணத்திற்காக மணமகன் வீட்டார் தரப்பிலிருந்து மணப்பெண் வீட்டாருக்கு சுமார் 2.5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் முடிந்த நிலையில், ரவிச்சந்திராவின் தந்தைக்கு வந்த ஒரு மர்ம போன் அழைப்பு ஒட்டுமொத்த குடும்பத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. எதிர்முனையில் பேசிய இரண்டு சிறுவர்கள், “அங்கிள், எங்க அம்மா அங்கே இருக்காங்க, அவங்ககிட்ட போனைக் கொடுங்க” என்று கேட்டுள்ளனர். பதற்றமடைந்த குடும்பத்தினர் விசாரித்தபோது, அந்த சிறுவர்கள் ரேகாவைத் தங்கள் தாய் என்று அடையாளம் காட்டினர்.

இதனைத் தொடர்ந்து ரவிச்சந்திராவின் குடும்பத்தினர் ரேகாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, ரேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும், அந்த உண்மையை மறைத்து வெறும் பணத்திற்காகவே ரவிச்சந்திராவை அவர் ஏமாற்றித் திருமணம் செய்ததும் அம்பலமானது. உண்மை தெரிந்தவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ரேகாவை, அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தற்போது ஹலகேரி காவல்துறையினர் ரேகாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்காகப் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் இளைஞரை ஏமாற்றிய இந்த விசித்திரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்திற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த மோசடி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

ஜி ஜின்பிங் கொடுத்த கிஃப்ட்.. ஏர்போர்ட்டில் நடந்த ட்விஸ்ட்…. சீனாவுக்கு டிரம்ப் கொடுத்த மரண அடி…. உலகமே அதிர்ச்சி…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச்…

7 minutes ago

குதிரையை பலி வாங்கிய கொடிய பாக்டீரியா.. மனிதர்களுக்கும் பரவுமா?… சென்னைக்கு வந்த புதிய ஆபத்து… ஷாக் நியூஸ்…!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில், குதிரை ஒன்றிற்கு 'கிளாண்டர்ஸ்' (Glanders) எனப்படும் அரிய வகை தொற்று நோய் பாதிப்பு இருப்பது கடந்த…

14 minutes ago

BREAKING: விஜய் அரசின் 9 அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு… சற்றுமுன் வெளியான லிஸ்ட்….!

தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட ஒன்பது அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன, இதன் மூலம் புதிய அமைச்சரவை தனது பணிகளை…

24 minutes ago

இருட்டுக்குள் ஆட்டோவை திருப்பிய டிரைவர்… கதறிய 15 வயது சிறுமி… முக்கூடல் அருகே நடந்த அந்த நடுக்கடலில் உறைந்த நிமிடம்…!

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்திச் சென்று, கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை…

28 minutes ago

இபிஎஸ் போட்ட அந்த ஒரு ‘ரகசிய’ உத்தரவு… பதறிப்போன வேலுமணி தரப்பு… அதிமுகவில் நள்ளிரவு பரபரப்பு…!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தேர்தலில் எந்தவொரு…

39 minutes ago

FLASH NEWS: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!

நடப்பு கல்வி ஆண்டில் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்குப் பள்ளிகளில்…

45 minutes ago