பீகார் மாநிலம் ஜஹானாபாத் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அங்கு வசிக்கும் சுனைனா சிங் என்ற பெண்ணிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இந்நிலையில், தனது உறவினர் வீட்டுப் பையனை (மருமகன் முறை) சிறுவன் என்று கருதி, அவர் தனது வீட்டிற்கு வந்தபோது தன்னுடன் தங்க வைத்துள்ளார்.
ஆனால், எதிர்பாராத விதமாக அந்த வாலிபருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் அந்தப் பெண் தற்போது கர்ப்பமடைந்துள்ளார். 7 ஆண்டுகளாகத் தனது கணவரால் முடியாத விஷயம், மருமகனால் சாத்தியமானதாகக் கூறி அந்தப் பெண் நெகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும், தனக்குத் தாய்மையைக் கொடுத்த அந்த வாலிபரை அவர் மனதார ஆசீர்வதித்துள்ளார். முறைதவறிய இந்த உறவு ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அந்தப் பெண்ணின் விசித்திரமான எதிர்வினை அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
