மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உயிரிழந்த மகனின் அரசு வேலை மற்றும் பணத்துக்காக மருமகளை மாமியார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானே மாவட்டம் கல்யாண் பகுதியை சேர்ந்த 60 வயதான லதாபாய் கங்குர்டே என்பவர் தன்னுடைய மருமகள் ரூபாலியை(35) இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார் . லதாபாயின் மகன் விலாஸ் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்துவிட்டார்.
அவருடைய மறைவுக்கு பின்னர் கிராஜுவிட்டு தொகையாக 10 லட்சம் ரூபாய் மனைவிக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கருணை அடிப்படையில் வழங்கப்படும் ரயில்வே வேலைக்காக ரூபாலி விண்ணப்பித்திருந்தார். இதனிடையே லதாபாய் தனது 15 வயது பேரனுக்கு அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். மருமகளுக்கு கிடைத்த பணத்தை மாமியார் கேட்ட நிலையில் மருமகள் மறுத்ததால் ஆத்திரமடைந்த லதாபாய் தனது நண்பர் ஜெகதீஷ் (67) என்பவருடன் சேர்ந்து மருமகளை கொலை செய்ய திட்டமிட்டார்.
இருவரும் சேர்ந்து கடந்த புத்தாண்டு தினத்தில் இரவு ரூபாலியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு உடலை அருகில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் வீசி விட்டனர். அதன் பிறகு எதுவும் தெரியாதது போல மருமகளை காணவில்லை என போலீசீர் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் லதா பாய் உண்மையை ஒப்புக்கொண்டார். தற்போது அவரையும் அவருடைய நண்பரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நீலத்திற்கும் தீன்தயாலுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, தீன்தயால் தனது மனைவி நீலத்தை அடிக்கடி கொடுமைப்படுத்தியும்,…
சென்னை மாநகராட்சிப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது, தவெக எம்.எல்.ஏ பல்லவி அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச்…
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில்…
சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ரூ.2.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில், மாநகராட்சி மேயர்…
அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.…
தமிழ்நாட்டில் நிலவும் கூட்டணி அரசியலை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தி, வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya…