தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் அனில் குமார். இவருடைய மனைவி சாய் லட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி கேதன் கார்த்திகேயா, லாஸ்யத வள்ளி (2) என்ற இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளார். இரட்டை குழந்தைகளுள் மகன் கேதனுக்கு பேச்சு தெளிவாக வரவில்லை.
இதனால் இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி சாய் லட்சுமி, தன்னுடைய இரட்டை குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து கணவர், மாமியார், மாமனார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
