சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக நேற்று மதியம் 2.40 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டுக்கு போலீஸ் சார் சென்றுள்ளனர். ஆனால் அங்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. அதாவது அவர்கள் சென்ற வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் வீட்டுக்குள் யாரோ இருப்பதாக நினைத்து நீண்ட நேரமாக போலீசார் கதவைத் தட்டிய நிலையில் யாரும் திறக்கவில்லை. இதனால் போலீசார் பூட்டை உடைத்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு அனுராதா கபூர் (52), அவருடைய மகன்கள் ஆஷிஷ் கபூர் (32), சைதன்யா கபூர் (27) ஆகிய மூவரும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டன. மேலும் அங்கிருந்த ஒரு அறையில் அவர்கள் கைப்பட எழுதிய குறிப்பு ஒன்றும் கிடைத்துள்ளது. அதை வைத்து பார்க்கும் போது அந்த குடும்பத்தினர் தீவிர மன உளைச்சலில் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தற்போது விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
