சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமலின் ஆர்.கே.எப்.ஐ என்ற பெயரில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சிஇஓ நாராயணன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது 12-ஆம் வகுப்பு படித்துள்ள கேரளாவை சேர்ந்த புகழேந்தி என்பவரும் தமிழகத்தைச் சேர்ந்த சுதாகர் இணைந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் அலுவலகம் ஒன்றை தொடங்கியுள்ளனர். அந்த அலுவலகத்தில் ஸ்டார்க் மார்க்கெட் ஆலோசகராகவும், வர்த்தகம் தொடர்பாக மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்து லாபம் பார்த்து வந்தனர்.
அவர்களது ஆலோசனைப்படி ஆகாஷ் ஸ்டார்க் மார்க்கெட்டில் 7 லட்சம் முதலீடு செய்துள்ளார். அவர் முதலீடு செய்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு வீழ்ச்சி அடைந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஆகாஷ் புகழேந்தி மற்றும் சுதாகரனை கடுமையாக திட்டி உள்ளார். இதனால் இருவரும் புதிதாக மோசடியில் ஈடுபட திட்டமிட்டனர்.
அதன்படி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிம்பு, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு நடிகை நடிகர்கள் தேவை என இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்தனர். அதன்படி அவர்கள் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தெரிகிறது. இதனால் நீண்ட தேடுதலுக்கு பிறகு சுதாகரையும், புகழேந்தையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணம் பத்திற்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…