கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே காணாமல் போன சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஹரிகரன் என்பவருடைய மூன்று வயது மகள் கிருத்திக்ஷா , வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மாயமானார். இதனால் பல இடங்களில் மகளைத் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். உடனே தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் குழந்தை விளையாடிக்கொண்டே அருகில் உள்ள கிணறு பகுதியை நோக்கி சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீயணைப்புத் துறையின் உதவியுடன் இரவு முழுவதும் கிணற்று பகுதியிலும் வயலிலும் தீவிரமாக தேடுதல் நடத்தியதில் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை குழந்தை விளையாடிய இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சோளக்காட்டில் அதன் உரிமையாளர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. உடனடியாக அவரும் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்ததால் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.
அஜய் என்பவன் திருஷ்டியை மிரட்டி, கட்டாயப்படுத்தி ஒரு திருமணப் பெண்ணைப் போல அலங்காரம் செய்துகொண்டு படுக்கையறையில் காத்திருக்குமாறு கூறுகிறான். "இதைத்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குச் சென்றபோது, அவருடன் சென்ற பிரம்மாண்டமான வாகன அணிவகுப்பின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி…
ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய டிக்கெட் பரிசோதகரின் (TTE) மனிதாபிமானச் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் எக்ஸ்பிரஸ்…
தமிழக மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து ஆராய முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு…
காதலனை வீட்டிற்கு வரவழைத்த மனைவியால் ஏற்பட்ட விபரீத மோதலில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் காதலனுக்கு மிகக் கொடூரமான தண்டனை அளித்த…
பிரான்ஸ் நாட்டு கிராமப்புறங்களில் போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடும் மான்களின் காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. காடுகளில்…