சீனாவில் திருமணமான நபர் ஒருவர் தன்னுடைய கள்ளக்காதலையுடன் வீட்டிலிருந்த சமயத்தில் அவருடைய மனைவி திடீரென்று வீட்டுக்கு வந்ததாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் தன் மனைவியை பார்த்ததும் அவர் பயந்து நடுங்கிய நிலையில், உடன் இருந்த பெண்மணி குடியிருப்பு கட்டிடத்தில் பத்தாவது மாடியில் பால்கனியிலிருந்து கீழே தொங்கியபடி தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றுள்ளார். சிறிது தவறு இருந்தால் பத்து மாடி உயரத்திலிருந்து நேரடியாக கீழே விழுந்து அவர் உயிரிழந்திருக்கலாம். தற்போது இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில், வெள்ளை நிற ஆடை அணிந்த அந்தப் பெண் மிகவும் இறுக்கமான ஜன்னல் விழும்பில் நடந்து கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகின்றது. அவருக்கு கீழே ஆழமான பகுதி இருக்கிறது.
அதேசமயம் ஜன்னலில் உள்ளே சட்டை இல்லாமல் நிற்கும் அவருடைய காதலர் அவளுக்கு ஏதோ கூறிவிட்டு உடனே மறைந்து செல்கின்றார். அந்தப் பெண் தன்னுடைய கையில் இருந்த மொபைல் ஃபோனோடு குடியிருப்பு கட்டிடத்தின் குழாய்கள் மற்றும் ஜன்னல்கள் உதவியுடன் பத்தாவது மாடியில் இருந்து ஒன்பதாவது மாடிக்கு இறங்க முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் ஒரு குழாயை மட்டுமே பிடித்தபடி உடல் சமநிலை காத்துக் கொண்டு அருகில் உள்ள ஜன்னலைத் தட்டி உதவி கேட்கின்றார். இந்த திகில் ஊட்டும் காட்சிகள் உறவுகளில் ஏற்படும் விரிசல் எவ்வாறு அபாயத்தை உருவாக்கும் என்பதை வெளிப்படையாகவே காட்டுகின்றது. தற்போது இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பித்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை, அபிஷேக்…
நடிகர் பிரகாஷ் ராஜின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜ் மோகன் ஆவேசமாகப்…
கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக…
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான கௌரவக் கொலைச் சம்பவத்தை இந்தத் தகவல் விவரிக்கிறது. நிதி…
கொளத்தூர் மேற்கு திமுக இளைஞரணி அமைப்பாளர் திலீப் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக)…
திருமணமான முதல் இரவிலேயே மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புதுப்பெண் ஒருவர் விசித்திரமான மிரட்டல் விடுத்த அதிர்ச்சி சம்பவம் பெரும்…