“உன்னை உயிரோடு புதைத்துவிடுவேன்” பெண் அதிகாரியை மிரட்டிய மந்திரி தம்பி.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு…!!

Spread the love

மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அமைச்சரின் சகோதரர் ஒருவர், பணியில் இருந்த பெண் அரசு அதிகாரியை பகிரங்கமாக மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநில அமைச்சரான ராதிகா சிங்கிடம் (Radhika Singh) ஒரு புகாரைக் கொண்டு சென்றபோது, அங்கு இருந்த அவரது சகோதரர் அஜய் சிங், அந்த அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அஜய் சிங், அந்த பெண் அதிகாரியைப் பார்த்து, “உன்னை இங்கேயே உயிரோடு புதைத்துவிடுவேன்” என்று மிக மோசமான வார்த்தைகளால் மிரட்டியுள்ளார். இந்த மிரட்டல் சம்பவத்தின் போது அங்கிருந்த மற்றவர்கள் தடுத்தும் அவர் அடங்காமல் அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டியது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியினர் அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் அரசு ஊழியர்களை இப்படித்தான் நடத்துவார்களா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அதிகாரி புகார் அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகப் பொதுமக்களிடையே கண்டனங்கள் எழுந்துள்ளன. அமைச்சரின் சகோதரர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

இது நடந்தால் சினிமாவிலிருந்து விலகுவேன்… நடிகர் சுந்தர்.சி திட்டவட்டம்… திரையுலகில் பரபரப்பு…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் அஜித்குமார், தற்போது சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு கார் பந்தயங்களில் தீவிர…

7 seconds ago

“நீதி வழங்கியவருக்கே இந்த நிலையா?… 2 மாதங்களாக நடந்த ‘சைலண்ட்’ டார்ச்சர்… பாத்ரூமில் முடிந்த உச்சகட்ட விபரீதம்.. நள்ளிரவில் கதறிய தந்தை… !!!மருமகளின் “சைக்கோ” ஆட்டம் அம்பலம்”…!!!

டெல்லி நீதிமன்ற இளம் நீதிபதி அமன் குமார் ஷர்மாவின் தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு…

9 minutes ago

“நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும்” என்ன காரணம் தெரியுமா.? ஓபனாக பேசிய சுந்தர்சி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் அஜித்குமார், தற்போது திரையுலகிலிருந்து தற்காலிக இடைவெளி எடுத்துக்கொண்டு கார் பந்தயங்களில் (Car Racing)…

12 minutes ago

“ஒடிசாவில் பயங்கரம்!… ஆசை ஆசையாய் சாப்பிட்ட தாஹிபரா.. 27 குழந்தைகள் உட்பட 58 பேர் உயிருக்குப் போராட்டம்… உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் தீவிர விசாரணை”….!!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படாபூர் கிராமத்தில், 'தாஹிபரா' எனப்படும் உள்ளூர் உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட…

23 minutes ago

“பகீர்!… வாயைத் திறந்து லாரியை விழுங்கிய பூமி… மணாலி-லே நெடுஞ்சாலையில் நடந்த திகில் சம்பவம்… வைரலாகும் திக் திக் வீடியோ”…!!!

வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதைகளில் பயணம் செய்வது மனதிற்கு இதமளித்தாலும், இயற்கை எப்போது வேண்டுமானாலும் தன் கோர முகத்தைக்…

36 minutes ago

“அப்பா, இதுதான் கடைசி கால்..” தற்கொலைக்கு முன் தந்தையிடம் சொன்ன ‘அந்த’ ஒரு ரகசியம்… நீதிபதியின் மரணத்தில் ஒளிந்திருக்கும் திடுக்கிடும் மர்மம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கூடுதல் சிவில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த அமன் குமார் சர்மா, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாகத்…

48 minutes ago