தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன் முறைப்படி தொடங்கியுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு மற்றும் அதன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், “ஆளுநர் உரை, தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம் என்பதைத் தெளிவாக விளக்குவதோடு, தமிழ்நாட்டை நாட்டின் முன்னணி மாநிலமாக உருவாக்குவதற்கான திட்ட வரைபடமாக அமைந்துள்ளது. அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக வாசித்துள்ளதைச் சிலர் த.வெ.க – பாஜக இடையேயான உறவு எனக் கூறுகின்றனர். ஆனால், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான மத்திய அமைப்புகளின் கோப்புகளுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தராமல் வைத்துள்ளதன் மூலம், பாஜகவிற்கும் திமுகவிற்கும் இடையேதான் நெருக்கமான உறவு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தியே இந்த அரசு செயல்படும், எந்தக் குற்றம் நடந்தாலும் பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார். மேலும் மின்வாரியச் செயல்பாடு மற்றும் பரந்தூர் விமான நிலையம் குறித்தும் பேசிய அமைச்சர், “மின்வாரியம் தினசரி மின்தடைகள் மற்றும் அவை சரிசெய்யப்படும் நேரத்தை வெளிப்படையாக வெளியிட்டு வருகிறது; நேற்று ஏற்பட்ட 52 இடங்களின் மின்தடைகளும் 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் சரிசெய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்காததால் அரசு நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன, அதைச் சீரமைக்கும் பணிகள் தற்போது நடக்கின்றன. பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், அரசு வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது அல்ல. ஆனால், நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்களை அழித்து வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்; இதுகுறித்து ஆய்வு செய்து தேவையான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…
டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…