ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு சென்னையில் தொடங்கி வைத்தார். சத்குரு ஜக்கி வாசுதேவன் வழிகாட்டுதலின்படி ஈஷா அறக்கட்டளை தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை பராமரித்து வருகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு உதவும் இலவச தகன சேவை உள்ளது.
ஈஷா அறக்கட்டளை தமிழக அரசுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள 17 தகன எரிவாயு மயானங்களை பராமரித்து இயக்கி வருகிறது. சென்னை வேலூர் தஞ்சாவூர் நெய்வேலி மற்றும் கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம் வீரகேரளம் துடியலூர் போத்தனூர் வெள்ளலூர் ஆலாந்துறை தொண்டாமுத்தூர் காரமடை கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பராமரித்து வருகிறது. சென்னையில் நேற்று இந்த திட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர் நேரு, ஈஷா அறக்கட்டளையின் இந்த சேவையை பாராட்டினார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…