இதுவரைக்கும் ஒருத்தர கூட நான் தூக்கல… ஆனா இனிமே பாக்க போறீங்க…. வார்னிங் கொடுத்த அமைச்சர் கே.என் நேரு…!

By Srimathi on புரட்டாதி 3, 2025

Spread the love

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல கட்சியினர் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர். திமுகவை பொருத்தவரை அடுத்த முறையும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் உறுதியாக உள்ளனர். இம்முறை 200 தொகுதிகளில் வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேரு திமுக ஆலோசனை கூட்டத்தில் பேசியது, “நான் 30 ஆண்டுகாலம் திமுகவில் மாவட்ட செயலாளராக செயலாற்றுகிறேன். ஆனால் ஒரே ஒருவரை கூட நான் கட்சியிலிருந்து நீக்கியது இல்லை. ஒன்றிய செயலாளர்களுக்காக நான் காவல் துறையினரிடம் சண்டை போட்டு மீண்டும் அவர்களை கொண்டு வந்துள்ளேன். தயவுசெய்து ஒன்றிய செயலாளர்கள் தங்களின் பணியை சரியாக செய்யுங்கள். நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க இல்ல…. நீங்க என்ன செஞ்சீங்க… என்று கேட்டால், அதெல்லாம் சரிதான், நாங்கள் பதில் சொல்ல தயாராக உள்ளோம். கழகச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஒரு விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும். எங்களால் செயல்பட முடியவில்லை, என்று நீங்கள் சொல்லிவிட்டால், நாங்கள் வேறு ஆள் போட்டு அதை செய்து கொள்கிறோம். அதில் ஒரு மாற்றம் கிடையாது. ஏனென்றால் சரியாக வேலை செய்யாதவர்களை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாது” என்று தெரிவித்தார்.