#image_title
தமிழ் சினிமா உலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கினார். 50 களில் தனது வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த எம் ஜி ஆர் அறுபதுகளில் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தை தொட்டார். அப்போது அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.
எம் ஜி ஆரை அப்போது எதிர்த்து பேசும் அதிகாரம் பெற்றிருந்தவர்கள் சின்னப்ப தேவர், நடிகை பானுமதி மற்றும் நடிகர் எம் ஆர் ராதா உள்ளிட்ட சிலர்தான் பெற்றிருந்தார்கள். கதாநாயகிகளை பொறுத்தவரை ஒரு கட்டத்துக்கு மேல் தொடர்ந்து அவர்கள் தன் படங்களில் இருப்பதை எம் ஜி ஆர் விரும்பமாட்டார்.
#image_title
ஏனென்றால் அந்த ஜோடி ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும் என்பதால்தான். அப்படிதான் சரோஜா தேவி, ஜெயலலிதா, லதா, உள்ளிட்ட சில ஹீரோயின்கள் ஒரு கட்டம் வரை தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வந்தனர். இதில் ஜெயலலிதாதான் அவரோடு அதிக படங்களில் நடித்தவர். இருவரும் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் காவல்காரன் என்ற படத்தில் எம் ஜி ஆர் நடிக்க ஒப்பந்தமான போது அந்த படத்தில் கதாநாயகியாக ஜெயலலிதா இருக்க வேண்டும் என இயக்குனர் நீலகண்டன் விரும்பியுள்ளார். ஆனால் அப்போது ஏனோ ஜெயலலிதா மேல் அதிருப்தியில் இருந்த எம் ஜி ஆர், சரோஜாதேவியை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.
#image_title
ஆனால் பிடிவாதமாக இயக்குனர் நீலகண்டன் ஜெயலலிதாதான் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தாராம். எம் ஜி ஆர் அனுமதி இல்லாமலேயே ஜெயலலிதாவை வைத்து சில காட்சிகளையும் படமாக்கி விட்டாராம். அதனால் கோபத்தில் இருந்த எம் ஜி ஆர் வேறு வழியில்லாமல் காவல்காரன் படத்தில் நடித்தார்.
படம் ரிலீஸ் ஆனபோது எம் ஜி ஆரே எதிர்பார்க்காத விதமாக படம் சூப்பர் ஹிட் ஆகி எம் ஜி ஆர்- ஜெயலலிதா காம்போ மிகச் சிறப்பான வரவேற்பையும் பெற்றுள்ளது. அதன் பிறகு மேலும் சில படங்களில் இந்த ஜோடி இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#image_title
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பம் அரங்கேற உள்ளதாகத் தலைநகர அரசியல் வட்டாரங்களில் இருந்து…
இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், டிக்கெட் பரிசோதனை முறையை நவீனமாக்கவும் டிடிஇ (TTE) எனப்படும் பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு உடலில்…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தேர்வு எழுதுவதற்கு சில நாட்களுக்கு முன்பே மாணவர்களுக்கு வினாக்கள் மற்றும் விடைகள் ரகசியமாகத்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள்…
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் பொருட்டு, நள்ளிரவில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…
தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றதைத் தொடர்ந்து, தவெக தரப்பில்…