#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் இல்லாத இடம் பிடித்தவர் MGR. இன்றைய நடிகர்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர் MGR.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடித்தார் MGR. பின்னர் சினிமாவில் நுழைந்து நடிகராக உயர்ந்தார். MGRரின் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.
MGR படங்கள் வெளிவந்தாலே ஹிட்டுதான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் MGR. தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR அரசியலில் நுழைந்தார். தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் MGR .
MGR மிகவும் நல்ல மனம் கொண்டவர். உதவும் மனப்பான்மை கொண்டவர். வாரி கொடுக்கும் வள்ளல் மட்டுமல்லாமல் எல்லா சக நடிகர்களுடனும் பாரபட்சம் பார்க்காமல் நட்புடன் பழகுபவர். அடிக்கடி காமெடியாகவும் பேசுவார் எம்ஜிஆர். அதுபோல் ஒரு சம்பவம் இருக்கிறது.
அது என்னவென்றால் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சோ எம்ஜிஆர் அவர்களிடம் ஒளிவிளக்கு நீங்கள் நடித்த நூறாவது படம். அதற்கு விழா எடுக்கலாம் இல்லையா என்று கேட்டிருக்கிறார். உடனே எம்ஜிஆர் அறிஞர் அண்ணா உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். இந்நிலையில் விழா எடுக்க எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். சரி என்று கேட்டுக்கொண்டே சோ மறுநாள் எம்.ஜி.ஆர்க்கு வாழ்த்து மடல் ஒன்றை எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்.
அந்த காலத்தில் திருமணம் என்றாலும் பிறந்தநாள் என்ன கொண்டாட்டம் என்றாலும் வாழ்த்து மடல் பரிசாக கொடுப்பது வழக்கம். எல்லோரும் அதை பிரேம் போட்டு மாட்டி வைத்துக் கொள்வர். அதேபோல் சோ வாழ்த்து மடல் எம்ஜிஆர் ஆக எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை வாங்கி முன்னும் பின்னும் திருப்பி பார்த்தார் எம்ஜிஆர். சோ என்ன திருப்பி திருப்பி பாக்குறிங்க ஐயா எழுத்துப் பிழை எதுவும் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். உடனே எம்ஜிஆர் சிரித்துக்கொண்டு இப்படி இரண்டு பக்கமும் வாழ்த்து மடல் எழுதிக் கொண்டு வந்திருக்கிறீர்களே நான் இதை எப்படி பிரேம் போட்டு மாட்டி வைப்பது என்று சிரித்துக் கொண்டே கேள்வி கேட்டிருக்கிறார் எம்ஜிஆர்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…