18 வருடங்கள் கழித்து சிம்மத்தில் உருவாகும் யோகம்… இந்த ராசிக்காரர்களை பாடாய்படுத்த போகுது…!

By Divyamayakannan on புரட்டாதி 1, 2025

Spread the love

சூரியன் தற்போது அவருடைய சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். கேது 18 ஆண்டுகளுக்கு பிறகு சிம்ம ராசியில் பயணித்து வருகிறது. கிரகங்களின் இளவரசனான புதன் நேற்று முதல் சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார். இதுபோன்ற மாற்றத்தினால் குறிப்பிட்டு மூன்று ராசிகள் துன்பங்களை அனுபவிக்க உள்ளனர்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் குடும்பத்தில் சில சலசலப்புகள் ஏற்படும், மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது, ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும், தூக்கயின்மை, தலைவலி இதுபோன்ற உடல் பாதிப்புகள் ஏற்படும், செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது அதனால் பொறுப்புடன் பார்த்து செலவுச் செய்யவேண்டும், பணியிடங்களில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும், வேலையை இழக்கக்கூட வாய்ப்பு உள்ளது.

   

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் பணியிடங்களில் வேலைகள் அதிகரிக்கும், சரியான நேரத்தில் வேலையை முடிப்பது கடினம், மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள், குடும்ப வாழ்க்கையில் தேவையில்லாத வம்புகள் வந்துச் சேரும், கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், உழைப்புக்கேத்த ஊதியம் கிடைக்காது.

   

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க கூடும், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும், இந்த நேரத்தில் குடும்பத்தில் ஏதேனும் பெரிய இழப்பு வரக்கூடும், புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டியது முக்கியம், பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.