“காதல், கல்யாணம், டைவர்ஸ், ரிப்பீட்டு”… 3வது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை… ரசிகர்கள் ஷாக்…!

Spread the love

தன்னுடைய திருமண உறவை முறித்துக் கொண்டதை நடிகை மீரா வாசுதேவன் அறிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் விபின் உடனான திருமண உறவையே அவர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் நடிகை மீரா வாசுதேவன். 2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். என் வாழ்க்கையின் மிக அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் நான் இருக்கின்றேன் என்று தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து மீரா instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி மீரா மற்றும் விபின் ஆகியோருக்கு திருமணம் நடந்தது.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலில் நடந்த சடங்குகளுக்கு பிறகு இருவரும் அதிகாரப்பூர்வமாக பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தன்மத்ரா திரைப்படம் மூலமாக மலையாள ரசிகர்களின் பிரியமான நடிகையாக மாறியவர்தான் இவர். குடும்ப விளக்கு உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். அந்த சீரியலின் ஒளிப்பதிவாளர் ஆன விபீனை திருமணம் செய்து கொண்டார். இது மீராவின் மூன்றாவது திருமணம் ஆகும்.

இதற்கு முன்னதாக விஷால் அகர்வால் என்பவரை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து அவரை 2008 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு நடிகர் ஜான் கொக்கேனை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து அவரையும் 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். தற்போது இவருடைய மூன்றாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த அடங்கமறு திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Nanthini

Recent Posts

‘ரோட்டுல வச்சி ஜாதி பெயரை சொல்லி, ரொம்ப அசிங்கமா”… குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தம்பதி தற்கொலை… வைரலாகும் தற்கொலை வீடியோ…!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குளிர்பான டீலர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கடன் வாங்கியவர் ஜாதியை சொல்லி பொதுவெளியில்…

4 minutes ago

இவனா? எனக்கா பாடுகிறான்…? சிவாஜியை கண்டு நடுங்கிய பிரபல பாடகர்… அவர் பாடிய 2 பாடல்களுமே சூப்பர் ஹிட்…!!

பிரபல பின்னணிப் பாடகர் மனோ, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 26,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.…

12 minutes ago

BREAKING: மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்பு… பிரதமர் மோடியுடன் இபிஎஸ் திடீர் சந்திப்பு… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக பாஜக உடன்…

14 minutes ago

திருமணமான பல பெண்களுடன் உல்லாசம்… கொலை செய்து தலையை தனியாக வெட்டிய நண்பர்கள்… சடலத்துடன் கோழி கழிவு, இறந்த நாயின் உடலை போட்ட கொடூரம்…!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி என்ற கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு 30…

19 minutes ago

மனைவியை துடிதுடிக்க கழுத்தறுத்துக் கொன்ற கணவன்… பேத்தியை பார்த்து கதறி அழுத பாட்டி… திருச்செந்தூர் சென்று திரும்பியதும் நடந்த கொடூரம்…!

தர்மபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட பூந்தி மஹால் தெருவில் பூங்கொடி (50) என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரூர்…

34 minutes ago

திடீர் திருப்பம்… திமுக வெற்றி காங்கிரஸ் கையில்… புதிய பரபரப்பை கிளப்பிவிட்ட செல்வப்பெருந்தகை…!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில்…

45 minutes ago