சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் சத்யா வீடியோவை லைக் செய்தது நாம தான் என்று தெரிந்துவிடக் கூடாது என்று சிட்டியை சந்தித்து நீ ஜாக்கிரதையாக இரு முத்து கையில் போன் கிடைத்துவிட்டது அவன் நோண்டாமல் விடமாட்டான். யார் சத்யா வீடியோ லீக் பண்ணினது என்று கண்டுபிடிக்காம விடமாட்டான் கூறிக் கொண்டிருக்கிறார் ரோகினி. அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் முத்துவும் அவரது நண்பரும் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது அவரிடம் வழக்கமாக வம்பு இழுக்கும் டிராபிக் போலீஸ் அங்கு வந்து சாப்பிடுகிறார். அப்போது வேண்டும் என்று முத்து அந்த போலீசை வெறுப்பேத்துகிறார். அந்த போலீசும் முத்துவை அடிப்பதற்கு வருகிறார். பிறகு இது பப்ளிக் பிளேஸ் பக்கத்தில் எல்லாரும் வீடியோ எடுக்கிறதை பார்த்து அமைதியாக சென்று விடுகிறார்.
அடுத்ததாக மீனா தனது அம்மாவின் கடைக்கு வருகிறார். அங்கு சத்யா வருகிறார் வந்து அக்கா உனக்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு நான் கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறி அந்த பெரிய ஆர்டரை கூறுகிறார். அதைக் கேட்டதும் மீனாவுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. அந்த ஆர்டர் கேட்டவரிடம் போன்ல பேசி எல்லாமே பைனல் பண்ணி விடுகிறார் மீனா. அடுத்ததாக சீதா நான் ஹாஸ்பிடலுக்கு போறேன். அங்க ஒரு போலீஸ் அவங்க அம்மா விட்டுட்டு போயிருக்காங்க நான் பார்த்துக்குறேன்னு சொல்லி இருக்கேன் அவங்களுக்கு யாருமே இல்ல என்று சொல்கிறார். உடனே மீனாவும் அவரது அம்மாவும் நீ உதவி பண்றது ரொம்ப நல்ல விஷயம் தான் நீ கெளம்பு என்று அனுப்பி வைக்கின்றனர்.
அடுத்ததாக மீனா வீட்டுக்கு வருகிறார். அங்கு முத்து வந்ததும் மீனாவின் முகத்தை பார்த்த உடனே என்ன முகம் பிரகாசமா இருக்கு நல்ல விஷயமா என்று கேட்கிறார். ஆமா பெரிய ஆர்டர் கிடைச்சிருக்குங்க இதுவரைக்கும் சின்னதாதான் பண்ணிட்டு இருந்தா இப்ப ரொம்ப பெருசா கிடைச்சிருக்கு. ஆனா அதுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது. ஐம்பதாயிரம் வரைக்கும் வேணும் என்ன பண்றது என்று யோசனை செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து யாருகிட்ட கேட்கலாம் யார் கேட்டா கொடுப்பாங்கன்னு தெரியலையே என்று சொல்கிறார். அடுத்ததாக மீனா ஒரு ஐடியா கொடுக்கிறார் நாம ரவி ஸ்ருதி கிட்ட கேட்டு பாக்கலாமாங்க நமக்கு வேலை முடிஞ்ச உடனே நமக்கு எப்படியும் காசு கிடைக்கும் அத திரும்ப கொடுத்துடலாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ரவி முதல்ல தனியா இருந்தான் இப்போ அவனுக்கி கல்யாணம் ஆயிடுச்சு எப்படி கேட்கிறது என்று யோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…