அடிக்கடி சிலருக்கு வயிற்றில் உப்பிசம் ஏற்படும். வாய்வு காரணமாக தான் பெரும்பாலும் வயிற்றில் உப்பிசம் உண்டாகும். இதனால் வயிற்றில் வலி, சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மேலும் வயிறு உப்புசம் அதிகரித்து அதிக கஷ்டத்தை கொடுக்கும். வயிற்றில் உப்புசம் ஏற்பட்டவுடன் 50 கிராம் ஓமத்தை எடுத்து சுத்தம் பார்த்து ஒரு சட்டியை அடுப்பில் வைத்து ஓமத்தை போட்டு வறுக்க வேண்டும்
சிவந்து வரும்போது அதை ஒரு முறத்தில் கொட்டி ஆறவிட வேண்டும். அதை கையினால் பிசைந்து அதன்மேல் உள்ள உமி உதிர்ந்து விடும்படி செய்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமான அம்மியில் அதை வைத்து 10 கிராம் பனைவெல்லத்தையும் சேர்த்து மை போல அரைத்து ஒரு வாய் அகன்ற சீசாவில் வைத்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை ஒரு கொட்டை பாக்கு அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்பிசம் நீங்கிவிடும்.
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…