மல்லை சத்யா மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதிமுகவுக்கு ஆகாத சிலருடன் மல்லை சத்யா உறவில் இருப்பதாக வைகோ குற்றம் சாட்tibஇருந்தார். நேற்று கூட கடந்த நான்கு ஆண்டுகளாக மல்லை சத்யா கட்சிக்கு உண்மையாக இல்லை எனவும் அவரது நடவடிக்கை சரியில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.

இப்படியான நிலையில் கடும் அதிருப்தியில் உள்ள மல்லை சத்யா விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் திமுக கூட்டணி தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பலமாக உள்ள நிலையில் மேலும் பல முக்கிய பிரபலங்களும் திமுகவில் தொடர்ந்து இணைந்து கொண்டிருப்பது கட்சிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
