சென்னையில் இன்று 10 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்.. நேரடியாக களம் இறங்கும் விஜய்.. தமிழகமே அதிரப்போகுது..!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

அரசியல் கட்சி தொடங்கிய பிறகு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் முதல் முறையாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியான அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் அஜித்குமார் மரண வழக்கை உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வலியுறுத்தியும்

காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை சிவானந்தா சாலையில் காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆர்ப்பாட்டத்தை முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் கட்சி சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் ஆர்ப்பாட்டத்தின்போது உருவ பொம்மை எரித்தல் கூடாது, தலைக்கவசம் அணியாமல் டூவீலரில் பயணிக்கக் கூடாது, எந்த ஒரு மத, ஜாதி, இன மற்றும் தனிப்பட்ட நபர்களை புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது உள்ளிட்ட 12 அறிவுரைகள் தமிழக வெற்றி கழகம் தொண்டர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.