திடீர் ஷாக்..! வைகோவின் உத்தரவை மீறி பதவியை ராஜினாமா செய்ய மறுத்தது ஏன்..? மதிமுக எம்.எல்.ஏ தி.மு.ராஜேந்திரன் கண்ணீர் விளக்கம்…!!

By Soundarya on ஆனி 28, 2026

Spread the love

மதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய பின்னரும், கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. தி.மு.ராஜேந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததற்கான காரணங்களை, வைகோவை நேரில் சந்தித்துத் தனது கண்ணீர் கலந்த விளக்கத்தை முகநூலில் பகிர்ந்துள்ளார். தொகுதி மக்களின் உணர்வுகளை மதித்து, அவசரப்பட்டுப் பதவி விலகுவது தனக்கும் வைகோவிற்கும் களங்கம் விளைவிக்கும் என்பதால், குறைந்தபட்சம் 6 மாதங்கள் பொறுத்திருக்கும்படி அவர் வைகோவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டமன்றத்தில் தகுதி நீக்கம் ஏற்படும் சூழல் வந்தால், மகிழ்ச்சியுடன் பதவியைத் துறந்து மக்களிடம் செல்வதாகத் தெரிவித்துள்ள ராஜேந்திரன், கூட்டணி குறித்து கட்சி முடிவை மதிப்பதாகவும், ஆனால் பொதுக்குழுவில் வைகோவின் உத்தரவுகளைச் செயல்படுத்த இயலாத சூழலால் அதில் பங்கேற்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

   

கடந்த 42 ஆண்டுகளாக வைகோ மீது தான் கொண்டுள்ள தூய்மையான விசுவாசத்தை வலியுறுத்தியுள்ள அவர், தனக்கு வாக்களித்த மக்கள் பெருமைப்படும் வகையிலும், தன் மீதோ அல்லது வைகோவின் மீதோ எந்தக் களங்கமும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகப் பதிவிட்டுள்ளார்.