Categories: சினிமா

ரொம்ப பயந்துட்டேன் இதுக்கு மேல முடியல.. மேடையில் கதறி அழுத மாஸ்டர் மகேந்திரன்.. வைரலாகும் வீடியோ..!!

Spread the love

நடிகர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். கடந்த 1994-ஆம் ஆண்டு சரத்குமாரின் நாட்டாமை படத்தில் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு நடிகர் பாண்டியராஜுடன் இணைந்து தாய்க்குலமே தாய்க்குலமே படத்திலும் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது மகேந்திரனுக்கு கிடைத்தது.

பின்னர் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, கோபாலா கோபாலா, காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் மகேந்திரன் நடித்த விழா ஆனந்தம், விந்தை, நாடோடி கனவு, விரைவில் ஆசை உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பை தரவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் பவானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மகேந்திரன் பிரபலமானார்.

தற்போது மாஸ்டர் மகேந்திரன் பிரசாந்த் நாகராஜன் இயக்கிய அமிகோ கேரேஜ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற மார்ச் மாதம் 15-ஆம் தேதி அமிகோ கேரேஜ் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. நேற்று அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் பேசிய நடிகர் மகேந்திரன், நான் என்றும் ஹீரோ இல்லை. உங்கள் வீட்டு பையன் தான்.

கடந்த 30 வருடமாக எனக்கு ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள். கொரோனா காலகட்டத்தில் சினிமாவை நினைத்து பயந்துவிட்டேன். என்ன செய்யப் போகிறேன் என பயம் வந்தது என கூறிக்கொண்டே அழுதுவிட்டார். அதே நேரம் இயக்குனர் பிரசாந்த் முதலில் டாக்குமெண்டரி எடுக்க வேண்டும் என கூறினார்.

நான் தான் படம் எடுக்கலாம் என கூறினேன். பல கஷ்டங்களுக்கு பிறகு இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். இதற்காக அனைவரும் அர்ப்பணிப்போடு உழைத்து உள்ளார்கள். இந்த படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள். எல்லாருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்த படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள் என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

“அவர் சின்னப்பிள்ளை… திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என சொன்னவர்…” எம்.பி. பதவி திமுக போட்ட பிச்சையா…? கே.என் நேரு-துரை வைக்கோ இடையே காரசார வார்த்தை போர்…!!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, முதல்வர் விஜய்யின் தவெகவுடன் மதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே…

2 minutes ago

“அண்டப் புழுகு… ஆகாசப் புழுகு பேசுபவர்…” சீமான் இந்த சவாலை ஏற்பாரா…? அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி…!!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால் திமுக, தவெக,…

13 minutes ago

“ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுப் பலன்கள் இனி விரிவடையும்…” PF பிடித்தம் செய்வதற்கான சம்பள வரம்பு உயர்வு…. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி ஒப்புதல்…!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பி.எப். தொகை…

20 minutes ago

“அமைச்சர்களுக்கு மேஜையில் விதவிதமான அசைவ உணவு…” தொண்டர்களுக்கு குப்பை தொட்டி அருகே உணவா…? தவெக 100-வது நாள் சாதனை விளக்க கூட்டத்தில் சர்ச்சை…!!

திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் சாதனை…

37 minutes ago

“அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லத்தான்…” இது புது கணக்கு.. முதல்வர் விஜயின் லண்டன் பயணம் …. திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேச்சு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…

1 மணத்தியாலம் ago

“என்னை விட்டுரு…” மாற்றுத்திறனாளி பெண்ணின் அலறல் சத்தம்… வேலைக்கு சென்ற இடத்தில் தர்ம அடி வாங்கிய தொழிலாளி….. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…

1 மணத்தியாலம் ago