பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பி.எப். தொகை பிடித்தம் செய்வதற்கான அடிப்படை ஊதிய உச்சவரம்பை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த முக்கிய மாற்றத்தின் மூலம், மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஊதியம் பெறும் 51 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய தொழிலாளர்கள் புதிதாகக் கட்டாய இ.பி.எப்.ஓ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவர். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு நீண்டகாலச் சேமிப்பு, ஓய்வூதியப் பாதுகாப்பு மற்றும் வைப்பு நிதி சார்ந்த காப்பீட்டுத் திட்டப் பலன்கள் ஆகியவை முறைப்படி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊதிய வரம்பு உயர்வினால் மத்திய அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ.11,339 கோடி கூடுதல் செலவாகும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.56,696 கோடி செலவிடப்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய உயர்வு மற்றும் பணிச் சூழல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட…
வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,…
பூமியிலிருந்து பார்க்கும்போது அமைதியாகக் காட்சியளிக்கும் நிலவில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய விண்வெளி மோதல் நிகழ்ந்துள்ளது. 2024 ஏப்ரல்…
தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…
மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…
\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…