EPS-ஐ அலறவிட்ட 100 நிர்வாகிகள்…. இரவோடு இரவாக மாறிய அரசியல் அரங்கம்… கூண்டோடு காலியாகும் அதிமுக…. காலையிலேயே பரபரப்பு….!

By Nanthini on ஆனி 18, 2026

Spread the love

அதிமுகவில் நாளுக்கு நாள் அரசியல் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து கூண்டோடு விலக முடிவெடுத்துள்ளது அக்கட்சித் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் என 100-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் ஒரே சமயத்தில் இந்த அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளதால், இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விஜயபாஸ்கர் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தாங்கள் பக்கபலமாக, துணையாக நிற்போம் என அவரது ஆதரவாளர்கள் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் அரசியல் வட்டாரத்தில் பலத்த விவாதங்களையும் கிளப்பியுள்ளது.