#image_title
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருக்கும். கடந்த இரண்டு வாரங்களாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலை பின்னுக்கு தள்ளி சன் டிவி சிங்க பெண்ணே சீரியல் முதல் இடத்தில் இருக்கிறது. சன் டிவி சீரியல்களை மக்கள் விரும்பி பார்ப்பார்கள். அதில் டிஆர்பி ரேட்டிங்கில் 7.63 புள்ளிகள் உடன் மருமகள் சீரியல் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் நடிகை கேப்ரெல்லா கதாநாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே கண்ணான கண்ணே சீரியலில் நடித்து பிரபலமான ராகுல் ஹீரோவாக நடிக்கிறார்.
சீரியல் ஆரம்பத்திலிருந்து ஹீரோ பிரபுவும், ஹீரோயின் ஆதிரையும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இருவரது அப்பாக்களும் சிறு வயதிலிருந்து நெருங்கிய நண்பர்கள். ஆதிரை தான் பெண் என்று தெரியாமல் பிரபு பெண் பார்க்க வருகிறார். அதன் பிறகு இரு குடும்பத்தினருக்கும் பிடித்து போய்விட்டதால் பிரபுவும் அதிரையும் திருமணத்திற்கு சம்மதம் கூறுகிறார்கள். அதுவரை சண்டை போட்டுக் கொண்டிருந்த பிரபுவும் அதிரையும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து நன்றாக பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் பிரபு பணத்தில் சிக்கனம் பிடிப்பவர் என்பது ஆதிரைக்கு தெரியாது.
திருமணத்தை சிக்கனமாக நடத்த வேண்டும் என பிரபு ஆசைப்படுகிறார். பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என ஆதிரை விரும்புகிறார். இன்றைய எபிசோடு ப்ரோமோ வெளியானது. அதில் பிரபு தனது குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து கொள்ளாமல் நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுக்க சென்று விட்டார். அவரது தந்தை பிரபு வாங்கி வந்த புடவையை பார்த்து எவ்வளவு விலை என கேட்கிறார். அதற்கு பிரபு 700 ரூபாய் எனக் கூறுகிறார். நிச்சயதார்த்தத்திற்கு 700 ரூபாய்க்கு புடவை ஏன் எடுத்தாய் என பிரபுவின் தம்பி கேட்டபோது இருவருக்கும் இடையே சண்டை நடக்கிறது.
பிரபுவின் செயலால் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மறுபக்கம் பிரபுவின் சித்தி வீட்டில் சண்டை நடக்கிறது. தனது அக்காள் மகன் நிச்சயதார்த்தத்திற்கு தான் கண்டிப்பாக போவேன் என பிரபுவின் சித்தி கூறுகிறார். பின்னர் ஆதிரை பிரபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுக்க சென்றதாக சொன்னார்கள். எவ்வளவு ரூபாய்க்கு புடவை எடுத்தீர்கள்? என கேட்கிறார். ஆதிரைடம் என்ன சொல்லி சமாளிக்கலாம் என பிரபு யோசிக்கிறார். பிரபு உண்மையை சொல்லி அதிரையிடம் மாட்டிக் கொள்வாரா அல்லது ஏதாவது காரணத்தை சொல்லி தப்பித்து விடுவாரா என்பதை இன்றைய எபிசோடில் தான் பார்க்க வேண்டும்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…