Categories: சினிமா

தனது ஸ்டைலில் மன்னிப்பு கேட்டு சரண்டரான மன்சூர்.. பதிலுக்கு திரிஷா என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க …

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் மன்சூர் அலிகான், தனது வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதன் மூலம் அவர் தற்போது இந்திய அளவில் பிரபலமாகியும் உள்ளார். அதாவது நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் திரிஷாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியது நாம் அனைவரும் அறிந்ததே. பிரபல வில்லன் நடிகராக வலம் வரும் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவும் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி ஆபாசமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாக ரசிகர்களும் பிரபலங்களும் என  பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் ஒரு சில நடிகர் மன்சூர் அலி கானுக்கு ஆதரவாகவும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் நடிகர் மன்சூர் அலி கானை விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.

இப்படி தொடர்ந்து மன்சூர் அலிகான் திரிஷா விவகாரம் இணையத்தில் வைரலாக  மாறியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி பேசியது தவறுதான் என்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கூற, ஆனால் மன்சூர் அலிகான் விடாப்படியாக என்னால் மன்னிப்பு கேட்கவே முடியாது என்று இருந்தார்.  ஆனால் தொடர்ந்து பிரச்சினைகள் கிளம்பியதால் மன்சூர் அலிகானுக்கு வேறு வழி இல்லை மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.


அதனால் அவர் தனது ஸ்டைலில் ‘ என் சக திரை நாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு’ என்று நீண்ட பதிவு வெளியிட்டு மன்னிப்பு கேட்டார். இதைத்தொடர்ந்து நடிகை த்ரிஷா தனது இணையதள பக்கத்தில் ‘ தவறு செய்வது மனித குணம். மன்னிப்பது தெய்வ குணம்’ என்று பதிவு செய்து கையெடுத்து கும்பிடும் மாதிரி ஒரு எமோஜியை போட்டு இந்த சர்ச்சைக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்து விட்டார். எப்படியோ ஒருவழியாக பிரச்சனை முடிவுக்கு  வந்து விட்டது.  இந்த சர்ச்சை பத்தி நீங்க என்ன நெனைக்குறீங்கன்னு கமெண்ட் ல சொல்லுங்க.

 

Begam

Recent Posts

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

22 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

23 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

33 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

43 minutes ago

ஐயோ… இது என்ன புதுசா இருக்கு… கல்யாணமே தேவையில்லையா?… டெல்லி ஹைகோர்ட் போட்ட ஒற்றைத் தீர்ப்பு… இணையத்தைக் கலக்கும் நியூஸ்…!!

சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…

45 minutes ago

“பள்ளியையே காணோம்… கண்டுபிடிச்சா ரூ1 லட்சம் ரொக்கம்… அதிரடி சவால் விட்ட எம்.பி சஞ்சய் சிங்… இணையத்தை வைரலாகும் பதிவு… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…

53 minutes ago