தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நாயகனாக இருக்கிறார் மணிகண்டன். ஆரம்பத்தில் பாய்ஸ், கிச்சா வயது 16, காதல் fm போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது தவிர ஒரு சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து வந்தார் மணிகண்டன்.
ஆனால் மணிகண்டனுக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது ஜெய் பீம் திரைப்படம். இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தது. அனைவரின் கவனத்தையும் ஒரே படத்தின் மூலம் ஈர்த்து விட்டார் மணிகண்டன். அதை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் பல வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.
ஜெய் பீம் தொடர்ந்து குட் நைட் திரைப்படத்தில் நடித்திருந்தார் மணிகண்டன். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து லவ்வர் திரைப்படமும் நடித்திருந்தார். இந்த படத்துக்கும் அவருக்கு நல்ல விமர்சனமே வந்தது. அவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. என்ன இந்த பையன் ரொம்ப சூப்பரா எதார்த்தமா நடிக்கிறாரே என்று அனைவரும் திரும்பி பார்க்கும் அளவுக்கு இருந்தார் மணிகண்டன்.
தற்போது இவரது நடிப்பில் குடும்பஸ்தன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல தனது எதார்த்தமான அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மணிகண்டன். இதுவரை பார்த்த மக்கள் மிகவும் நல்ல விமர்சனங்களையே கூறி இருக்கிறார்கள். தொடர்ந்து குட் நைட் லவ்வர் குடும்பஸ்தன் என மூன்று படங்களுமே வெற்றி படமாக மணிகண்டனுக்கு அமைந்துவிட்டது.
படத்தைப் பார்த்த எல்லோருமே மணிகண்டன் கதை தேர்ந்தெடுக்கும் விதம், பக்கத்து வீட்டு பையன் போல அவரது நடிப்பு இருப்பதால் பார்வையாளர்களிடம் கனேக்ட்டாக முடிகிறது. இவரது படம் அடுத்தது எப்ப வரும் என்று எதிர்பார்ப்பை மக்களுக்குள் தூண்டி விட்டார் மணிகண்டன். அதனால் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்து இருக்கிறார் மணிகண்டன். அடுத்தடுத்து இவர் படங்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…