திரிபுராவின் பனிசாகரில் 14 மாத சிறுமி ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தினசரி கூலித் தொழிலாளி. அவர் அசாமின் நிலம்பசாரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, குழந்தை கொலை செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு நெல் வயலில் புதைக்கப்பட்டதாக பனிசாகர் காவல் நிலைய பொறுப்பதிகாரி சுமந்தா பட்டாச்சார்ஜி பிடிஐயிடம் தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் சுற்றுலா செல்வதாகக் கூறி தனது தாயிடமிருந்து குழந்தையை அழைத்து சென்றுள்ளார் . ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று மணி நேரம் கழித்தும் திரும்பாததால் சிறுமியின் தாய் பீதியடைந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டார்கள். பின்னர், குழந்தையின் உடல் நெல் வயலில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
