லண்டனில் ஓடும் பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர் ரமலான் நோன்பு இருப்பதாகவும், உணவின் மணம் தனது பசியைத் தூண்டுவதால் உடனடியாக உணவை மூடி வைக்க வேண்டும் என்றும் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண்ணின் தனிப்பட்ட உரிமையில் தலையிடும் வகையில் அந்த நபர் விடுத்த மிரட்டல், அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லண்டனில் பேருந்தில் ஒரு பெண் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த நபர் தான் ரமலான் நோன்பு இருப்பதாகக் கூறி அவரைச் சாப்பிடக்கூடாது எனத் தடுத்துள்ளார்.
”உணவின் மணம் என் பசியைத் தூண்டுகிறது, உடனே உணவை மூடு” என அந்த நபர் சண்டையிட, அந்தப் பெண்ணோ “நான் உணவு உண்பது என்… pic.twitter.com/1ZvZrGevaq
— SSR 🐘 (@SSR_Sivaraj) March 6, 2026
தனது மத நம்பிக்கையை மற்றவர்கள் மேல் திணிக்க முயன்ற அந்த நபருக்கு, அந்தப் பெண் துணிச்சலுடன் பதிலடி கொடுத்துள்ளார். “நான் உணவு உண்பது எனது அடிப்படை உரிமை; உனது விரதத்திற்காக நான் பசியோடு இருக்க முடியாது. உனக்கு இது பிடிக்கவில்லை என்றால் நீ தாராளமாகப் பேருந்தை விட்டு இறங்கி வெளியே போகலாம்” என்று அவர் ஆணித்தரமாகக் கூறியது சமூக வலைதளங்களில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
இன்றைய உலகச் சூழலில் இத்தகைய துணிச்சலான நிலைப்பாடே மிகவும் அவசியமானது என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மிரட்டல் விடுப்பவர்களுக்கு அடிபணியாமல், “உன் மதம் உன்னோடு, என் உரிமை என்னோடு” என்று உறுதியாக நிற்பதே இத்தகைய அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். குறிப்பாக, இஸ்ரேல் போன்ற நாடுகள் தனது பாதுகாப்பிற்காக எடுக்கும் அதிரடி முடிவுகளைப் போல, தனிமனித உரிமைகளை அத்துமீறுபவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பதே தீர்வாக அமையும்.
