இதெல்லாம் ரொம்ப ஓவர்… பரபரப்பான சாலையின் நடுவே அமர்ந்து முதியவர் செய்த வேலை… வைரலாகும் வீடியோ…!

By Nanthini on கார்த்திகை 14, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அதில் சில வீடியோக்கள் விசித்திரமாக இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில், நபர் ஒருவர் சாலையில் அமர்ந்தபடி தன் முன்பு தண்ணீர் பாட்டில், கண்ணாடி டம்ளர், தீப்பெட்டி மற்றும் ஒரு சிறிய மதுபாட்டினை வைத்து சாதாரணமாக இருப்பது போல தெரிகிறது. அவரைச் சுற்றி இருசக்கர வாகனங்களும், கார்களும் சென்றாலும் யாரும் அவரை அங்கிருந்து எழுப்ப முயற்சிக்கவில்லை. இந்த வீடியோ பகிரப்பட்ட பிறகு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சிலர் அந்த நபரின் கம்பீரமான நடத்தை குறித்து வேடிக்கையாக கருத்து தெரிவிக்க பல இத்தகைய இடங்களில் போதையில் இவ்வாறு நடப்பது தவறு என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சாலையின் நடுவில் இப்படிப்பட்ட செயல்கள் செய்வது போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல் சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்து என கருத்து தெரிவித்து வருகின்றன. இருந்தாலும் அந்த நபரை பார்த்தோம் யாரும் தலையிடாமல் சென்று விட்டது சமூக பாதுகாப்பின் நிலை பற்றிய கேள்வியை எழுப்புகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

@memar_adi.18 பதிவைப் பகிர்ந்துள்ளார்