மத்தியப் பிரதேச மாநிலம் பிண்டு மாவட்டத்தில், தனது விருப்பத்திற்கு மாறாகக் காதலுடன் சென்ற மகளைத் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. முனீஷ் தனுக் என்பவரின் 21 வயது மகள் நித்துவிற்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில், அவர் தனது கணவரைப் பிரிந்து பழைய காதலனுடன் சென்று குவாலியரில் மறுமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகளைப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்து, கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்குச் சென்று துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுப் படுகொலை செய்துள்ளார்.
இந்த கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், நித்துவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகளைக் கௌரவக் கொலை செய்த முனீஷ் தனுக்கை போலீசார் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவரை விட்டுவிட்டு காதலனுடன் சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தச் செயலைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவளிப்பது குறித்து எடப்பாடி…
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…