தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஹசுராபாத் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் திரிவேணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ள நிலையில் வெங்கடேஷ் தன்னுடைய மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அவரின் துன்புறுத்தல்களை தாங்க முடியாமல் திரிவேணி அண்மையில் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு கிளம்பிச் சென்று விட்டார். அதன் பிறகு வெங்கடேஷ் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி இனி சண்டை போட மாட்டேன் என்று கூறி மனைவியை மீண்டும் தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆனால் வீட்டுக்கு வந்து சில நாட்களில் மீண்டும் மனைவியுடன் வெங்கடேஷ் சண்டை போட தொடங்கியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வெங்கடேஷ் தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அதன் பிறகு மனைவியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். குழந்தைகள் முன்னிலையிலேயே அவர்களின் தாயை வெங்கடேஷ் உயிருடன் எரித்துள்ளார். இதனை தடுக்க முயன்ற அவருடைய மகளையும் தீயில் தள்ளிவிட்டார்.
இதனால் அந்தப் பெண் குழந்தையும் உடலில் மோசமான தீக்காயங்களுடன் அலறி துடித்தது. உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் திரிவேணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவருடைய மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் தலைமறைவாக இருந்த வெங்கடேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் 2026 சட்டசபை தேர்தல் முடிந்து, தமிழக வெற்றிக் கழக அரசு நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், இன்று புதிய எம்.எல்.ஏ-க்களின்…
நெதர்லாந்து நாட்டின் 'எம்பி ஹோண்டியஸ்' (MB Hondius) என்ற சொகுசு கப்பலில் பயணித்த இரண்டு இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் (Hantavirus)…
தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த…
இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அன்று ரத்தச் சிவப்பில் வர்த்தகமாகி முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “சிங்கப்பெண்” என்ற பெயரில் புதிய…
தமிழக சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராகப்…