ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனது சொந்த மனைவி மற்றும் 3 பிஞ்சு மகள்களைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய ராஹுல் என்பவனைப் போலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 4 பேரைக் கொடூரமாகக் கொன்ற பிறகு ஜெய்ப்பூரிலிருந்து தப்பிய அந்தப் பாதகன், காடு ஷியாம்ஜி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஒரு விடுதியில் தங்கியுள்ளார்..
கையிலிருந்த பணம் தீர்ந்த பிறகு, தான் அணிந்திருந்த மோதிரத்தை விற்க முயன்றபோது விடுதி உரிமையாளர் அதை வாங்க மறுத்துள்ளார். இதையடுத்து ரிங்காஸ் பகுதிக்கு வந்து முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு சுற்றித் திரிந்த கொலையாளி ராஹுலின் இருப்பிடத்தைச் சிறப்பு போலிஸ் படை கண்டறிந்து வளைத்துப் பிடித்தது.
அவரை கைது செய்வதற்காக போலிஸார் ரூ. 25,000 வெகுமதி அறிவித்த அடுத்த ஒரே நாளில் அவர் போலிஸ் வலையில் சிக்கியுள்ளார். முதற்கட்ட விசாரணையில், கடும் கடன் சுமையில் மூழ்கியிருந்ததால் இந்த கொடூரக் கொலையைச் செய்ததாக அவன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், போலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு யெல்லப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த 40 வயதான முபாரக் பாஷா என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பக்கவாதம் ஏற்பட்டு…
அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ என்பவரும், குரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதில் குரியா…
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம், அக்கட்சியிலிருந்து விலகித் தனது…
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள துங் சோங் ஹோங் பகுதியில் வீட்டின் வெளியே சிமெண்டால் கட்டப்பட்ட மீன் தொட்டியில்…
காஞ்சிபுரம் அருகே உள்ள வண்ணான்தாங்கல் பகுதியைச் சேர்ந்த விறகு வியாபாரி ஆறுமுகம் என்பவரிடம், சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த ஆனந்தன்…
கேரள மாநிலத்தில் செல்போன் மற்றும் இணையதளங்கள் வாயிலாக இயங்கி வந்த ஆபாச வீடியோ விற்பனை சாம்ராஜ்ஜியத்தை அதிரடியாகக் கண்டுபிடித்து போலிஸார்…