maheshabu to vijay in quitting cinema
தமிழ் சினிமாவில் முப்பது வருடங்களாக நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் விஜய். ஒரு கட்டத்தில் இளையதளபதி என அழைக்கப்பட்டவர் சமீபத்தில் தளபதி விஜயாக மாறினார். தன்னுடைய கெரியரில் பீக்கில் இருக்கும் சமயத்தில் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய கட்சி பெயரையும் அறிவித்தார்.
Ghilli and okkadu
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளார். அதன்பின் தீவிர அரசியலில் களமிறங்க உள்ளார். விஜய் மக்களுக்கு நெருக்கமாக காரணம் அவரின் படங்கள் தான், அதிலும் குறிப்பாக விஜய் நடித்த கில்லி, போக்கிரி எல்லாம் அவருக்கு திருப்புமுனையாக இருந்த படங்கள். இந்த படங்கள் எல்லாம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு, போக்கிரி படங்களின் ரீமேக் தான்.
Maheshbabu in pokkiri
vijay in pokkiri
படங்கள் மட்டுமல்ல, மகேஷ் பாபுவின் டிரஸிங் கூட விஜய் பின்பற்ற ஆரம்பித்தார். ஆனா இது தெரியாத ரசிகர்கள் மகேஷ் பாபு தான் விஜய் மாதிரி செய்வதாக குற்றம் சாட்டுவர். ஆனால் உண்மையில், மகேஷ் பாபு தான் ஒரிஜினல், அப்படிப்பட்ட மகேஷ் பாபுவும் சினிமாவுக்கு முழுக்கு போடா உள்ளதாக சில தினங்களாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
cheyyaru balu about maheshbabu
அவர் கூறியதாவது, மகேஷ் பாபு கண்டிப்பாக சினிமாவை விட்டு விலக மாட்டார், அவர் குறித்து வரும் இந்த செய்தி வதந்தி தான். இப்போது ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க உள்ளார். அவர் விஜய்யை பார்த்து அரசியலுக்கு வரப்போவதாக பலர் கூறினர். ஆனால் அது பொய், மகேஷ் பாபு அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை, அவர் நிஜ வாழ்க்கையில் நடிகராக இருந்து கொண்டே எத்தனையோ நல் உதவிகளை செய்து வருகிறார். ஆகையால் இது வெறும் வதந்தி தான் என கூறியுள்ளார் செய்யாறு பாலு.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…