“இனி சர்வ நாசம் தான்”… டிரம்போட பொறுமைக்கும் எல்லை உண்டு…. ஐநாவில் அமெரிக்க தூதர் விடுத்த பகீர் எச்சரிக்கை…. கதறும் ஈரான்….!

Spread the love

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸின் சமீபத்திய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பேசிய அவர், சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடுவோம் என்ற ஈரானின் மிரட்டல் எவ்வகையிலும் தற்காப்பு நடவடிக்கையாகக் கருதப்படாது என்று சாடினார். அமெரிக்காவின் இந்த கடுமையான விமர்சனத்தால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், அமைதிக்கான சூழல் நிலவும் போது அமெரிக்க அதிகாரிகள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசுவது முறையற்றது எனக் கூறி கொந்தளித்துள்ளது.

அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் தனது உரையில், சர்வதேச நீர்வழிகளை மூடுவது என்பது உலகப் பொருளாதாரத்தையே முடக்கும் ஒரு ‘சர்வதேச மிரட்டல்’ என்றும், இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைத் தடுப்பதன் மூலம் உலகளாவிய உணவு, அத்தியாவசிய உதவிப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்தால், அந்நாட்டின் ராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்த அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ராஜதந்திர தீர்வுகளுக்கு வாய்ப்பளிப்பார் என்றாலும் அவரது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதைக் குறிப்பிட்டார்.

சமீபத்தில் ஹார்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. அதற்குப் போட்டியாக குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதே தற்போதைய மோதல்களின் பின்னணியாகும். இந்த தீவிரமான சூழலுக்கு மத்தியில், மைக் வால்ட்ஸ் தற்போது விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட வேண்டிய அமைதி ஒப்பந்தத்தை மேலும் தள்ளிப்போகச் செய்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்களைச் சூழ வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

18 seconds ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

13 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

38 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

45 minutes ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

49 minutes ago