விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. இந்த சீரியலை ராஜா ராணி, பாரதி கண்ணம்மா சீரியல் இயக்கிய பிரவீன் தான் இயக்கி வருகிறார் .இந்த சீரியலின் கதை கொடைக்கானலில் வாழும் சந்தானம் தன்னுடைய நான்கு பெண் குழந்தைகளையும் திருமணம் செய்து கொள்வதற்காக வெளிநாட்டில் போய் சம்பாதிக்கிறார்.

கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை நண்பன் பசுபதி அக்கவுண்டிற்கு அனுப்ப அவர் சந்தனத்தின் குடும்பத்திற்கு கொடுக்காமல் ஏமாற்றுகிறான். இதுதான் ஒரு கட்டத்தில் நண்பனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த சந்தானம் இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இறந்து விடுகிறார். இப்படி தான் இந்த சீரியலின் கதை நகர்கிறது . இந்த தொடர் டிஆர்பிஇல் நல்ல ரேட்டிங் பிடித்து வருகிறது.

இந்த தொடரில் நடித்து வரும் நடிகர்கள் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுவாமிநாதன் ஒரு நாளைக்கு 15,000 சம்பளம் வாங்குகிறார். காவேரி கதாபாத்திரத்தில் நடித்தவரும் லட்சுமி பிரியா 10,000, குமரன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் கம்ரூதீன் ஒரு நாளைக்கு 8000 வாங்குகிறார்.

கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தாரணி ஹெப்சிபா ரூ.6 ஆயிரம் சம்பளமும், 000 ரூபாய் குழந்தை நட்சத்திரமாக நர்மதாவாக நடிக்கும் காவியா விற்கு 2000 சம்பளம் கொடுக்கப்படுகிறது. இரண்டாவது ஹீரோவாக நிவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் ருத்ரன் பிரவீனுக்கு பத்தாயிரம் சம்பளமும், வில்லி வேடத்தில் நடிக்கும் நடிகை சகஸ்திகா 7000 சம்பளமும் பெறுகிறார். வில்லன் ரோலில் பசுபதியாக நடிக்கும் நடிகர ரமேஷ் 6000 சம்பளம் வாங்குகிறார் . பாட்டி கல்யாணியாக நடிக்கும் நடிகைக்கு நான்காயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் அதிகமாக சரவணன் சில எபிசோடுகளில் மட்டுமே நடித்தாலும் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது
