மதுரை முருக பக்தர்கள மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் முழு உத்தரவு நகல் வெளியானது. அதன்படி மதுரை பாண்டி கோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி நடத்தவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி. மத அமைப்புகளை அரசியலுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
முருக பக்தர்கள் மாநாட்டில் மத நல்லிணக்கம் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒலிபெருக்கி பயன்பாட்டை அரசு தெரிவிக்கும் அளவிற்குள் இருக்குமாறு மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
