சென்னைக்கு முந்தைய பெயர் மெட்ராஸ்! ஆனால் மெட்ராஸுக்கு முன்னாடி என்ன பெயர் இருந்தது தெரியுமா? வாங்க பார்க்கலாம்

Spread the love

தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் இந்தியாவின் மிக முக்கியமான மெட்ரோபொலிடன் சிட்டியாகவும் விளங்குகிறது சென்னை மாநகரம். சென்னையை முதலில் “மெட்ராஸ்” என்றும் “மதராசப்பட்டினம்” என்றும் அழைத்து வந்தார்கள். அதன் பின்பு 1996 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது.

தாமரல வெங்கடாபதி என்ற ஒருவர் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக சென்னைப் பகுதியை ஆண்டுவந்தார். அப்போது சென்னைப் பகுதி மதராசப்பட்டினம் என்ற பெயரிலேயே இருந்தது. தாமரல வெங்கடாபதியின் தந்தையின் பெயர் சென்னப்ப நாயக்கர். அவரது நினைவாக தற்போதுள்ள சென்னையின் சில பகுதிகள் சென்னப்பட்டனம் என்று அப்போதே அழைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வரலாற்றை அடிப்படையாக வைத்துத்தான் மெட்ராஸ், சென்னை என்று பெயர் மாற்றம் பெற்றது. எனினும் மதராசப்பட்டினம் அல்லது மெட்ராஸ் போன்ற பெயர்கள் அழைக்கப்படுவதற்கு முன்பே இன்னொரு பெயரும் சென்னைக்கு இருந்திருக்கிறது.

1973 ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் துறையினரால் கிருஷ்ணகிரியில் விஜயநகரப் பேரரசு காலத்துக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் கிழக்குக் கடற்கரை துறைமுகப்பட்டினங்களை குறித்து பல நகரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில் “மாதரசன் பட்டணம்” என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த “மாதரசன் பட்டணம்”தான் அதன் பின் ஆங்கிலேயர்களால் மறுவி மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆக மாதரசப் பட்டணம் என்ற பெயர் மெட்ராஸ் ஆக மாறி அதன் பின் சென்னையாக மாறியிருக்கிறது.

Arun

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

1 மணத்தியாலம் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

1 மணத்தியாலம் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

2 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

2 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

3 மணத்தியாலங்கள் ago