தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் இந்தியாவின் மிக முக்கியமான மெட்ரோபொலிடன் சிட்டியாகவும் விளங்குகிறது சென்னை மாநகரம். சென்னையை முதலில் “மெட்ராஸ்” என்றும் “மதராசப்பட்டினம்” என்றும் அழைத்து வந்தார்கள். அதன் பின்பு 1996 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது.
தாமரல வெங்கடாபதி என்ற ஒருவர் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக சென்னைப் பகுதியை ஆண்டுவந்தார். அப்போது சென்னைப் பகுதி மதராசப்பட்டினம் என்ற பெயரிலேயே இருந்தது. தாமரல வெங்கடாபதியின் தந்தையின் பெயர் சென்னப்ப நாயக்கர். அவரது நினைவாக தற்போதுள்ள சென்னையின் சில பகுதிகள் சென்னப்பட்டனம் என்று அப்போதே அழைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வரலாற்றை அடிப்படையாக வைத்துத்தான் மெட்ராஸ், சென்னை என்று பெயர் மாற்றம் பெற்றது. எனினும் மதராசப்பட்டினம் அல்லது மெட்ராஸ் போன்ற பெயர்கள் அழைக்கப்படுவதற்கு முன்பே இன்னொரு பெயரும் சென்னைக்கு இருந்திருக்கிறது.
1973 ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் துறையினரால் கிருஷ்ணகிரியில் விஜயநகரப் பேரரசு காலத்துக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் கிழக்குக் கடற்கரை துறைமுகப்பட்டினங்களை குறித்து பல நகரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில் “மாதரசன் பட்டணம்” என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த “மாதரசன் பட்டணம்”தான் அதன் பின் ஆங்கிலேயர்களால் மறுவி மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆக மாதரசப் பட்டணம் என்ற பெயர் மெட்ராஸ் ஆக மாறி அதன் பின் சென்னையாக மாறியிருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…