#image_title
2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் செலின் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் மடோனா ஜெபாஸ்டின். பிரேமம் படத்தில் அனுபாமா உடன் சிறு பெண்ணாக நடித்த இவர் கடைசியில் நிவின் பாலியை திருமணம் செய்து கொள்வார். இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மடோனா தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பின்னர் கவன், வானம் கொண்டட்டும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சினிமாவில் தொடக்கத்தில் தொகுப்பாளராக இருந்து வந்த இவர் சிறு வயதில் இருந்தே கர்நாடக இசை பயின்று இருக்கின்றார்.
சூர்யா டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிய போது தான் இவருக்கு பிரேமம் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு சகோதரி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
இந்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது. தற்போது மடோனா ஜெபஸ்டின் மாதவனுடன் இணைந்து அதிர்ஷ்டசாலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மடோனா செபாஸ்டின் நன்றாக பாடக்கூடியவர் என்பது தெரிந்த தகவலாக இருந்தாலும் பலரும் அவர் பாடி கேட்டதில்லை.
சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மடோனா ஜெபாஸ்டின் அந்நியன் படத்தில் வரும் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடலை பாடியிருந்தார். இதை கேட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். அந்த அளவுக்கு அவர் சிறப்பாக பாடி அரங்கையே அதிர வைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…