சென்னை, மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு பிரபல சமையல் கலைஞர் அனைவருக்கும் தெரிந்ததுதான். சமீபத்தில் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சர்ச்சை எழுந்தது. மனைவி ஸ்ருதி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவதாக ஜாய் கிரிசில்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார், புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தது. பின்பு முதல் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படமும் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில் இரண்டாவது மனைவி மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார். கர்ப்பத்தை கலைக்க சொல்லி வற்புறுத்தியதாக புகாரிலிருந்து. இதற்கு எந்தயொரு பதிலும் கூறாமல் மாதம்பட்டி அவருடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸ்ல்டா அவருடைய இணையதள பக்கத்தில் மாதம்பட்டி உடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ‘அவள் உயிர் கொடுத்தது ஒரு உறவுக்காக.. அவன் ஆட பார்த்தது ஒரு விளையாட்டுக்காக’ என்று பதிவு செய்துள்ளார்.
