#image_title
தற்போது பெரிய பெரிய நடிகர் நடிகைகள் செலிப்ரடீஸ் வீட்டிற்கு சமையல் கேட்டரிங் செய்வதற்கு முதல் ஆளாக லிஸ்டில் இருப்பது மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் தான். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தனது தந்தை செய்த சமையல் பிசினஸை அவர் கையில் எடுத்து உலக ஃபேமஸ் அளவில் செய்து வருகிறார். தற்போது அவர் வழியே மிகவும் பிரபலமாகி கொண்டு இருப்பவர் மாதம்பட்டி ஐஸ்வர்யா நாகராஜ். இவர் மாதம்பட்டி ரங்கராஜின் ஒன்றுவிட்ட தங்கை ஆவார்.
மாதம்பட்டி ஐஸ்வர்யா மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் சித்தப்பா மகள். ஐஸ்வர்யாவின் தந்தையும் ரங்கராஜ் அவர்களின் தந்தையும் ஒன்றாக சமையல் பிசினஸை செய்து வந்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் பிள்ளைகளான ரங்கராஜ் அவரது தந்தையின் சமையலையும் மாதம்பட்டி ஐஸ்வர்யா அவரது தந்தையின் சமையல் பிசினஸையும் கையில் எடுத்து இருவரும் வேறு வேறு ஸ்டைலில் செய்ய தொடங்கினர். அப்படி ஆரம்பித்த மாதம்பட்டி ஐஸ்வர்யாவின் கேட்டரிங் பெயர் Wedding Flavours என்பதாகும்.
என்னதான் வீடுகளில் சமையல் என்றாலே பெண்கள் தான் என்று இருந்தாலும் ஹோட்டல் உள்ளிட்ட கேட்டரிங் துறையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. அந்த ஆணாதிக்கம் நிறைந்த துறையில் நம்மளால் சாதிக்க முடியாதா என்ற துணிவுடன் இறங்கி அசத்திக் கொண்டிருக்கிறார் மாதம்பட்டி ஐஸ்வர்யா நாகராஜ்.
இதைப் பற்றி அவர் கூறும் பொழுது எங்கள் டோட்டல் ஃபேமிலி மாதம்பட்டி சமையல் வேலைதான் பிரதான தொழில். எங்களது மாதம்பட்டி பெயரையும் சமையல் கலையையும் உலகறிய செய்தது ரங்கராஜ் அண்ணா தான். எனக்கும் அண்ணா நிறைய சப்போர்ட் பண்ணாங்க. அவர் இல்லனா நாங்க வெளியே தெரிந்திருக்கவே மாட்டோம். நான் அப்பாவோட பிசினஸ் டேக் ஓவர் பண்ணும் போது எனக்கு ரொம்ப விமர்சனம் பண்ணாங்க. உன்னால இது செய்ய முடியுமா இந்த மாதிரி பிசினஸ் எல்லாம் ஆண்களுக்கு தான் சரியா வரும் நீ ரொம்ப சின்ன பொண்ணு அப்படி எல்லாம் சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா இதுல இறங்கி சாதிக்கணும் அப்படிங்கறது என்னோட லட்சியம் கனவு அதை என்னால எவ்வளவு பெஸ்ட்டா செய்ய முடியுமோ அதை செஞ்சுட்டு தான் இருக்கேன் என்று தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் கூறியிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் ஒன்றுவிட்ட தங்கை மாதம்பட்டி ஐஸ்வர்யா.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…