Categories: சினிமா

தசாவதாரம் படத்தில் நடித்ததால் எனக்குப் பல பட வாய்ப்பு பறிபோனது… பாடல் ஆசிரியர் கபிலன் பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

Spread the love

தமிழ் சினிமா பாடல் ஆசிரியர்களில் மிகவும் தனித்துவம் மிக்க ஒருவர் பாடல் ஆசிரியர் கபிலன். 2000 களின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை பிஸியான பாடல் ஆசிரியராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜய்க்கு அறிமுக குத்து பாடல் எழுதினாலும், அழகான மெலடி எழுதினாலும் இரண்டிலும் தன்னுடைய முத்திரையைப் பதிப்பார்.

இளையராஜா முதல் தற்போதைய அனிருத், ஷான் ரோல்டன் வரை அனைவருக்கும் பாடல் எழுதியுள்ள கபிலன், கமல்ஹாசன் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர். பாண்டிச்சேரியை சேர்ந்த அவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை பார்த்த அவருக்கு அதன் மூலமாக சினிமாக்காரர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அப்போது அவர் எழுதிய கவிதைகளைப் படித்த கமல்ஹாசன் அவரிடம் பழக ஆரம்பித்துள்ளார். அப்படிதான் அவருக்கு தெனாலி பட வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதன் பின்னர் அவர் வித்யாசாகர் இசையில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து முன்னணி பாடல் ஆசிரியர் ஆனார்.

இதற்கிடையில் பிஸியான பாடல் ஆசிரியராக இருந்த அவரை தன்னுடைய தசாவதாரம் திரைப்படத்தில் நடிக்க வைத்தார் கமல்ஹாசன். அந்த படத்தில் அவர் பாடல் ஆசிரியர் கபிலனாகவே நடித்தார்.இந்த படத்தில் நடிக்க முதலில் கபிலன் தயங்கினாராம். ஆனால் கமல்ஹாசன் உங்களுக்கு கஷ்டமான பாத்திரம் எல்லாம் இல்லை. நீங்கள் நீங்களாகவேதான் வரப் போகிறீர்கள் என்று சொல்லி நடிக்க வைத்துள்ளார்.

ஆனால் அந்த படத்தில் நடிக்க சென்றதால் பல பெரிய படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கைவிட்டு போயுள்ளது. அதில் சிவாஜி, அழகிய தமிழ்மகன் போன்ற படங்களும் அடக்கமாம். தான் நடிக்க சென்றுவிட்டதால் அந்த சமயத்தில் அவரை யாரும் பாடல் எழுத அழைக்கவில்லை எனக் கபிலன் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

 

vinoth

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

3 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

3 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

3 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago