தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. ஒரே வாரத்தில் உலக அளவில் 375.40 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவில் ஒரே வாரத்தில் எந்த அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வசூல் செய்ததில்லை தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படம், வெளியாகி வசூல் 600 கோடியை கடந்து விட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல்வேறு முறையில் கொண்டாடி வருகிறது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தை அவரது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தலைவர் 171 திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளது. ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்புகளில் ஒன்று தான் தலைவர்171. இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், தற்போதைய இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தலைவர்171 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
அண்ணாத்த மற்றும் ஜெயிலர் படங்களைத் தொடர்ந்து வரிசையாக மூன்றாவது முறை தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைகிறது சன் பிக்சர்ஸ். இன்று லைக்கா நிறுவனம் ஒரே நாளில் தலைவரின் அடுத்தடுத்த படங்களுக்கான அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதன்படி முதல் அறிவிப்பாக லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தளபதி 171 படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்றும், இயக்குனர் T J ஞானவேல் என்றும், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…